Monday, May 24, 2010

இரண்டு படங்களில் நடிக்கும் விஜய்


வில்லு, குருவி, வேட்டைக்காரனைத் தொடர்ந்து சுராவும் படு தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே. என்.எஸ்.சி என்று சொல்லக் கூடிய வினியோகஸ்தர்கள் குழு இத் தோல்விகளால் தாங்கள் அடைந்த நஷ்டங்களை ஈடு செய்ய இயலாது. எனவூ தாங்கள் கொடுத்த "குறைந்த பட்ச உத்திரவாத" பணத்தில் 40% மாவது விஜய் திருப்பித் தர வேண்டும் அல்லது தங்கள் தயாரிப்பில் நடித்து கொடுக்க வேண்டும் என கோரியிருக்கிறது.

ஆனால் இது பற்றி மூச்சு கூட விடாமல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். ஆம் அவை "காவல்காரன்" மற்றும் "வேலாயுதம்".

காவல்காரன் படத்தை சித்திக் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அசின் சேர்ந்திருக்கிறார். இதன் படப் பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவியின் ச்கோதரர் ஜெயம் ராஜா இயக்கத்தில் "வேலாயுதம்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் இரண்டு நடிகைகள் ஜெனிலியா மற்றும் ஹான்சிகா மோட்வானி. இதோடு இல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முதல் 3இடியட்ஸ் ரீமேக்கிலும் நடிக்க போகிறாராம் விஜய்.

இப்படங்களாவது வெற்றி பெறுமா எனப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment